சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கீதாஞ்சலி செல்வராகவன் இயக்கிய மாலை நேரத்து மயக்கம் படத்தில் நடித்தவர் வாமிகா கபி. பாலிவுட்டிலிருந்து அவரை அழைத்து வந்தார் செல்வராகவன். மாலை நேரத்து மயக்கம் படத்தில் அவரது நடிப்பு வெகுவாக பேசப்பட்டது. படம் வெற்றி பெறாததால் அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது ஹிந்தி மற்றும் பாஞ்சாபி படங்களில் நடித்து வரும் வாமிகா. மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார்.
நயன்தாரா நடித்த மாயா படத்தை இயக்கிய அஸ்வின் சரவணன் இயக்கும் படம் இறவாக்காலம். இந்தப் படம் மாயா போன்றே ஒரு திகில் படம். இதில் எஸ்.ஜே.சூர்யா, ஷிவதா, வாமிகா இந்த மூவரும் தான் முக்கிய கேரக்டர்கள். மூவரைச் சுற்றித் தான் கதையே நடக்கும். இந்தப் படத்தின் மூலம் மாலை நேரத்து மயக்கத்தில் விட்ட இடத்தை பிடித்து விடலாம் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் வாமிகா. படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பில் என்.முரளி ராமசாமி தயாரிக்கிறார். 50 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்திருக்கிறது.