சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எங்கு பார்த்தாலும் ஓவியா ஜூரம் தான் அடிக்கிறது. அவரின் ஒவ்வொரு மேனரிசம், குறும்புத்தனமான பேச்சுக்கள், நேர்மையாக இருக்கும் விதம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ரசிகர்களை கவர்ந்துள்ளது. அதனால் தான் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மற்ற கலைஞர்கள் எல்லாம் ஓவியாவை கார்னர் செய்யும் போது தனி ஆளாக அனைவரையும் சமாளித்து ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றிருக்கிறார். சமூகவலைதளங்களில் ஓவியா, ஓவியா ஆர்மி என்ற தனி படையே உருவாகி இருக்கிறது.
இந்நிலையில், கடந்த சில தினங்களாக ஓவியா - ஆரவ் இடையே காதல் விவகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மனதளவில் கொஞ்சம் பாதிக்கப்பட்டிருக்கிறார் ஓவியா. இந்தவாரம் அவர் நீக்கப்படும் பட்டியலில் இருக்கிறார். ஆனால் ரசிகர்களுக்கு ஏகோபித்த அதரவு இருந்து வருகிறது.
இந்தச்சூழலில் ஓவியாவிற்கு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஏதோ அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது போன்ற தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. இதுதொடர்பாக போலீஸாரும் நிகழ்ச்சி நடந்த இடத்திற்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஓவியாவிற்கு என்ன ஆனது என்ற ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது. சமூகவலைதளங்களில் மீண்டும் ஓவியா பற்றிய பேச்சாகவே இருக்கிறது.