சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் கமல்ஹாசன் சமீபகாலமாக சினிமா விட அரசியல் சார்ந்த விஷயங்களை அதிகம் பேசி வருகிறார். தமிழகத்தில் எல்லா துறைகளிலும் ஊழல் மலிந்து கிடக்கிறது என்று அவர் சொன்ன ஒற்றை வார்த்தை அமைச்சர்கள் மற்றும் கமல் இடையே கடும் வார்த்தை போரை உருவாக்கியது.
தமிழக அரசு மீது தொடர்ந்து கமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார். சமீபத்தில் கூட பெரம்பலூரில் சத்துணவில் குழந்தைகளுக்கும் வழங்கப்படும் முட்டையில் நடக்கும் ஊழலை கண்டுபிடித்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்.
இந்நிலையில் தற்போது கமல் நடிகர் சிவாஜியின் சிலை அகற்றம் குறித்த விஷயத்தை கையில் எடுத்திருக்கிறார். அதில் அரசை எதிர்பார்க்காமல் சிவாஜிக்கு ஒரு சிலை செய்வோம் என்று கூறியிருக்கிறார்.
இதுகுறித்து கமல் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛சிவாஜி ரசிகர் மனதிலும் நடிக்க நினைத்த தமிழன் மனதிலும் பதிந்தவர். இனி ஒரு சிலை செய்வோம், அதை எந்த நாளும் காப்போம் அரசுக்கும் அப்பால் என் அப்பா என கூறியுள்ளார்.