சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு சினிமாவில் கடந்த சில வாரங்களாக போதை பொருள் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. அதில் சிலர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், நடிகை காஜல் அகர்வாலின் மேனேஜர் ரோனி என்பவரின் வீட்டில் கஞ்சா பாக்கெட்டுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை அறிந்த போலீசார் அதை பறிமுதல் செய்தனர். அதோடு அவரையும் கைது செய்தனர். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த காஜல் அகர்வால், ஒருவரின் தனிப்பட்ட விஷயத்தில் நான் கவனிக்க முடியாது. சமூகத்திற்கு எதிராக நான் ஒருபோதும் நிற்க மாட்டேன் என்று சொன்னார்.
மேலும், இந்த விவகாரத்தினால் தனது இமேஜ் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதும் காஜல் அகர்வால், இனிமேல் தனக்கு மேனேஜரே வேண்டாம் என்ற முடிவுக்கு வந்துள்ளாராம். ஒரேயொரு உதவியாளரை மட்டுமே நியமித்துள்ள அவர், படங்களுக்கான கதை கேட்பது, சம்பளம் பேசுவது போன்ற விசயங்களை தனது பெற்றோரின் உதவியுடன் தானே நிர்வாகித்துக்கொள்ள முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.