சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தெலுங்கு சினிமாவை ஆட்டி படைக்கும் போதை பொருள் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் இதுவரை, பூரி ஜெகன்னாத், சுப்பராஜூ, தருண், நவ்தீப், ஷ்யாம் கே. நாயுடு, கலை இயக்குனர் சின்னா, நடிகை சார்மி கவுர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். ஜூலை 27-ம் தேதியான இன்று கவர்ச்சி நடிகை முமைத்கான் விசாரணையில் கலந்து கொண்டுள்ளார்.
இதற்காக புனேயில் இருந்து விமானம் மூலம் ஐதராபாத் வந்த முமைத்கான், மாலை விசாரணை முடிந்ததும் அங்கிருந்தபடியே பிக்பாஸில் கலந்து கொள்ள உள்ள இருக்கிறார்.
முன்னதாக, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள முமைத்கான் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறக்கூடாது என்கிற விதிமுறை உள்ளது. அப்படி வெளியேறினால் பின்னர் அவரால் அந்த நிகழ்ச்சியை தொடர முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், போலீஸ் விசாரணை என்பதை தவிர்க்க முடியாது என்கிற காரணத்தினால் முமைத்கானுக்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.