வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
தெலுங்குத் திரையுலகத்தில் போதைப் பழக்க விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. சிறப்பு விசாரணைப் பிரிவு தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. மொத்தம் 12 கலைஞர்களுக்கு விசாரணைக்கு வருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதுவரை இயக்குனர் பூரி ஜெகன்னாத், நடிகர்கள் தருண், நவ்தீப், சுப்பராஜ், ஒளிப்பதிவாளர் ஷாம் கே நாயுடு ஆகியோரிடம் விசாரணை நடந்து முடிந்துள்ளது. அவர்களிடமிருந்து தலைமுடி, நகம், ரத்தம் ஆகியோவை பரிசோதனைக்காக பெறப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனிடையே விசாரணைக்கு வருவதற்கு தன்னுடைய வக்கீல்களை அனுமதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் நடிகை சார்மி வழக்கு தொடர்ந்துள்ளார். அத்துடன் தன்னிடமிருந்து பரிசோதனைக்காக தலைமுடி, நகம், ரத்தம் ஆகியவற்றையும் எடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொண்டுள்ளார். 'பிக் பாக்ஸ்' நிகழ்ச்சியில் உள்ள நடிகை முமைத்கானும் விசாரணைக்கு வர உள்ளார்.
கடந்த சில நாட்களாக நடந்த விசாரணையில் நடிகை காஜல் அகர்வால், ராசி கண்ணா, லாவன்யா திரிபாதி உள்ளிட்ட சில நடிகர்களின் மேனேஜர் ஆக உள்ள ரோன்சன் ஜோசப் என்பவரை போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கைது செய்துள்ளனர். அவர் வீட்டிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த கைது விவகாரம் தெலுங்குத் திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.