சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில் தெலுங்கு சினிமாவைச் சேர்ந்த பல்வேறு நடிகர் நடிகைகள், இயக்குனர்களிடம் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். அந்தவகையில் நேற்று முன்தினம் இயக்குனர் பூரி ஜெகன்னாத்திடம் விசாரணை நடந்தது. அதையடுத்து நேற்று நடிகர் கிரில் சுப்பராஜூடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கவர்ச்சி நடிகை முமைத்கானின் பெயரும் இந்த போதை பொருள் வழக்கில் இடம்பெற்றிருப்பதால் அவருக்கும் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர். இதனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆனால், இப்போது தனது இக்கட்டான சூழ்நிலையை பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்துபவர்களிடம் சொல்லி, அதற்கான அனுமதியை பெற்று விட்டாராம் முமைத்கான். அதனால், ஜூலை 27-ந்தேதி போதை தடுப்பு போலீசார் விசாரணையில் கலந்து கொள்ளும் முமைத்கான், அதையடுத்து தொடர்ந்து பிக்பாஸில் பங்கேற்பார் என்கிறார்கள்.