நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.
அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, தங்கவேலு நடித்தனர். ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் வசனம் எழுதினார்கள்.
இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே ஒரே ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டடது. இரண்டுமே ஒரு கதையுள்ள படங்கள். வித்தியாசம் என்னவென்றால் கருணாநிதி வசனம் எழுதிய அம்மையப்பன் சரித்திர படமாகவும், கண்ணதாசனம் வசனம் எழுதிய சுகம் எங்கே சமூக படமாகவும் தயாரானது.
இந்த நேரத்தில் அரசியல்ரீதியாக பிரிந்திருந்த கண்ணதாசனும், கருணாநிதியும் படத்தின் கதை சம்பந்தமாக எழுத்திலும், பேச்சிலும் மோதிக்கொண்டார்கள். வெற்றி பெறுவது சரித்திரமா, சமூகமா என ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். சுகம் எங்கே வெளிவந்த இரண்டு வாரத்திற்கு பிறகு அம்மையப்பன் வெளிவந்தது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சுகம் எங்கே பரவலான பாராட்டை பெற்றது.