சண்டை ஒரு பக்கம் இருந்தாலும் அண்ணனின் கண்ணப்பா படத்துக்கு தம்பி பாராட்டு | ராஷ்மிகா கொடுத்த வாய்ப்பை கோட்டை விட்ட ரசிகர்கள் | கோவிலுக்கு வந்த நடிகர் ஜெயசூர்யாவை புகைப்படம் எடுத்த போட்டோகிராபர் மீது தாக்குதல் : மருத்துவமனையில் அனுமதி | சுரேஷ் கோபி பட டைட்டில் பிரச்னையில் சென்சார் போர்டுக்கு நீதிமன்றம் கேள்வி | ஐமேக்ஸில் வெளியாகும் வார் 2 | நியூமராலஜிபடி பெயரில் திருத்தம் செய்த மீனாட்சி சவுத்ரி | டெரரான கெட்டப்பில் ராஷ்மிகா : மைசா படத்தின் அதிரடி போஸ்டர் வெளியானது | ரஜினியின் கூலி படத்தின் ஹிந்தி டைட்டில் மாற்றம் | அஜித் 64வது படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகிறது | ஜீ 5 ஓடிடி மற்றும் ஜீ 5 தமிழ் டிவியி ஒளிபரப்பாகும் சூரியின் மாமன் |
1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.
அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, தங்கவேலு நடித்தனர். ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் வசனம் எழுதினார்கள்.
இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே ஒரே ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டடது. இரண்டுமே ஒரு கதையுள்ள படங்கள். வித்தியாசம் என்னவென்றால் கருணாநிதி வசனம் எழுதிய அம்மையப்பன் சரித்திர படமாகவும், கண்ணதாசனம் வசனம் எழுதிய சுகம் எங்கே சமூக படமாகவும் தயாரானது.
இந்த நேரத்தில் அரசியல்ரீதியாக பிரிந்திருந்த கண்ணதாசனும், கருணாநிதியும் படத்தின் கதை சம்பந்தமாக எழுத்திலும், பேச்சிலும் மோதிக்கொண்டார்கள். வெற்றி பெறுவது சரித்திரமா, சமூகமா என ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். சுகம் எங்கே வெளிவந்த இரண்டு வாரத்திற்கு பிறகு அம்மையப்பன் வெளிவந்தது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சுகம் எங்கே பரவலான பாராட்டை பெற்றது.