ரஜினியின் 'ஜெயிலர்-2' ரிலீஸ் ஜூனிலிருந்து ஆகஸ்ட்டுக்கு மாறுகிறது! | சென்னையில் சீர்காழி கோவிந்தராஜன் பெயரில் சாலை | எம்ஜிஆரின் 'இதயக்கனி' படத்தை பார்த்த எடப்பாடி பழனிசாமி | ராஜமவுலி படத்தை அடுத்து சந்தீப் ரெட்டி வங்கா படத்தில் நடிக்கும் மகேஷ் பாபு! | திருமணத்திற்கு 10 நாளே இருக்கும் நிலையில் ஹிந்தி படத்திலிருந்து வெளியேறிய ராஷ்மிகா! | ரொமாண்டிக் பேண்டசி படமாக உருவாகும் 'டபுள் ஆக்குபன்சி' | காளை அடக்குபவராக விமல் நடிக்கும் 'வடம்' | இசை அமைப்பாளரை மணந்தார் ரோஷினி | பிளாஷ்பேக் : பாக்யராஜை இயக்கிய பாலகுமாரன் | பிளாஷ்பேக்: தமிழில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பாலிவுட் நடிகை |

1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.
அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, தங்கவேலு நடித்தனர். ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் வசனம் எழுதினார்கள்.
இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே ஒரே ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டடது. இரண்டுமே ஒரு கதையுள்ள படங்கள். வித்தியாசம் என்னவென்றால் கருணாநிதி வசனம் எழுதிய அம்மையப்பன் சரித்திர படமாகவும், கண்ணதாசனம் வசனம் எழுதிய சுகம் எங்கே சமூக படமாகவும் தயாரானது.
இந்த நேரத்தில் அரசியல்ரீதியாக பிரிந்திருந்த கண்ணதாசனும், கருணாநிதியும் படத்தின் கதை சம்பந்தமாக எழுத்திலும், பேச்சிலும் மோதிக்கொண்டார்கள். வெற்றி பெறுவது சரித்திரமா, சமூகமா என ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். சுகம் எங்கே வெளிவந்த இரண்டு வாரத்திற்கு பிறகு அம்மையப்பன் வெளிவந்தது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சுகம் எங்கே பரவலான பாராட்டை பெற்றது.




