மன்னிப்பு டுவீட்... சின்மயி விளக்கம் அளிக்க வேண்டும் : மோகன்ஜி | நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஆதாரங்களை சமர்ப்பித்த நிவின்பாலி | இந்த ஆண்டு 3வது யானை படம் | குறும்புக்கார குழந்தை : விநாயகனை நெகிழ வைத்த மம்முட்டி | ரிலீசுக்கு முன்பே 350 கோடி முன் வியாபாரத்தை முடித்த 'திரிஷ்யம் 3' | பாலிவுட் படப்பிடிப்பில் உட்காருவதற்கு நாற்காலி கூட கிடைக்காது; துல்கர் சல்மான் பகீர் தகவல் | 'திரிஷ்யம் 3' படப்பிடிப்பை நிறைவு செய்த மோகன்லால் | ரியோ என பெயரை மாற்றிய நடிகர் ரியோ ராஜ்! | 5 ஆண்டுகளாக கதை குறித்த ஆலோசனையில் ஈடுபட்டு வரும் கீர்த்தி சுரேஷ்! | மலேசியா முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த அஜித்குமார்! |

1954ம் ஆண்டு கருணாநிதி திரைக்கதை வசனத்தில் அம்மையப்பன் என்ற படம் தயாரானது. இதில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ஜி.சகுந்தலா, டி.வி.நாராயணசாமி, எஸ்.வரலட்சுமி நடித்தனர். பீம்சிங் இயக்கினார்.
அதேபோல ஜெமினி நிறுவனத்தின் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் கே.ராம்நாத் இயக்கத்தில் சுகம் எங்கே என்ற படம் தயாரானது. இதில் கே.ஆர்.ராமசாமி, சாவித்ரி, பி.எஸ்வீரப்பா, தங்கவேலு நடித்தனர். ஏ.கே.வேலனும், கண்ணதாசனும் வசனம் எழுதினார்கள்.
இரண்டு படத்துக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் இரண்டு படங்களுமே ஒரே ஆங்கிலப் படத்தை தழுவி எடுக்கப்பட்டடது. இரண்டுமே ஒரு கதையுள்ள படங்கள். வித்தியாசம் என்னவென்றால் கருணாநிதி வசனம் எழுதிய அம்மையப்பன் சரித்திர படமாகவும், கண்ணதாசனம் வசனம் எழுதிய சுகம் எங்கே சமூக படமாகவும் தயாரானது.
இந்த நேரத்தில் அரசியல்ரீதியாக பிரிந்திருந்த கண்ணதாசனும், கருணாநிதியும் படத்தின் கதை சம்பந்தமாக எழுத்திலும், பேச்சிலும் மோதிக்கொண்டார்கள். வெற்றி பெறுவது சரித்திரமா, சமூகமா என ரசிகர்கள் மோதிக் கொண்டார்கள். சுகம் எங்கே வெளிவந்த இரண்டு வாரத்திற்கு பிறகு அம்மையப்பன் வெளிவந்தது. இரண்டு படங்களுமே பெரிய வெற்றி பெறவில்லை. என்றாலும் சுகம் எங்கே பரவலான பாராட்டை பெற்றது.




