வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் |
அதர்வா நடிக்கும் படம் 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிட முடிவு செய்திருந்தனர். தற்போது நடைபெறும் தியேட்டர் ஸ்டிரைக் காரமாக பட வெளியீட்டை தள்ளி வைக்க ஆலோசனை நடைபெறுவதாக சொல்லப்படுகிறது.
'ஓடம்' இளவரசு இயக்கியிருக்கும் இந்த படத்தில் அதர்வாவுடன் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா கெசண்ட்ரா, பிரணிதா, அதிதி என நான்கு கதாநாயகிகள் நடிக்கிறார்கள். அதர்வாவுடன் சூரி, 'மொட்டை' ராஜேந்திரன், தயாரிப்பாளர் டி.சிவா, மயில்சாமி முதலானோரும் நடித்திருக்கும் இந்த படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.
அம்மா கிரியேஷன்ஸ்' டி.சிவா தயாரித்துள்ள இப்படம் சமீபத்தில் சென்சாருக்கு அனுப்பப்பட்டது. படத்தை பார்த்த சென்சார் உறுப்பினர்கள்'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்திற்கு அனைவரும் பார்க்க தகுதியான படம் என்பதற்கான 'யு' சான்றிதழ் வழங்கி இருக்கிறார்கள். இதனால் மகிழ்ச்சியடைந்த டி.சிவா 'ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்' படத்தை இம்மாதம் 14ஆம் தேதி வெளியிடும் முயற்சியில் இறங்கினார்.
இந்நிலையில் தியேட்டர் ஸ்டிரைக் வந்ததால் ஒரு வாரம் தள்ளிட ஜூலை 21 அன்று வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல் அடிபடுகிறது.