சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் சித்தார்த் மீது கொலை மிரட்டல் புகார் கூறப்பட்டுள்ளது. தமிழில் பாய்ஸ், ஆயுத எழுத்து போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் சித்தார்த். தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் சித்தார்த் மீது மதுரவாயல் லட்சுமி நகரை சேர்ந்த பாலு என்பவர் போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில், நான் வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்து வருகிறேன். ராஜாஅண்ணாமலைபுரம் சேமியர்கள் சாலையில் வசிக்கும் நடிகர் சித்தார்த்தும், அவரது தந்தை சூரிய நாராயணனும் என்னை அணுகி அவர்கள் வீட்டுக்கு உள்அலங்காரம் செய்யும்படி கேட்டனர். அதற்கு ரூ.6 லட்சத்து 63 ஆயிரம் செலவாகும் என திட்ட மதிப்பீடு கொடுத்தேன். அவர்கள் சம்மதித்தனர். நானும் அவர்கள் வீட்டில் உள் அலங்கார பணியை செய்து முடித்தேன். ஆனால் பேசிய படி பணம் தரவில்லை. மொத்தம் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் மட்டுமே தந்துள்ளனர். மீதி ரூ.2 லட்சத்து 37 ஆயிரத்தை தரவில்லை. பல தடவை அவர்களிடம் கேட்டு விட்டேன் தரவில்லை.
கடந்த 13ம்தேதி மீண்டும் அவர்கள் வீட்டுக்கு போய் பணம் கேட்டேன். அப்போது சித்தார்த்தும், சூரியநாராயணனும் பணம் தர முடியாது என்று சொல்லி எனக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் பணத்தை வாங்கிக் தரும்படி கேட்டு கொள்கிறேன். என்று கூறப்பட்டுள்ளது. இந்த புகார் மீது விசாரணை நடத்த மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிடப்பட்டிருப்பதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.