சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
அஜித்தை 'அமராவதி' படம் மூலம் அறிமுகம் செய்த இயக்குனர் செல்வா அதன் பின் பல வெற்றிப் படங்களை இயக்கினார். தற்போது அவர் இயக்கி வரும் படம் 'வணங்காமுடி'. இப்படத்தில் அரவிந்த்சாமி கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக ரித்திகா சிங், நந்திதா, சாந்தினி, சிம்ரன் ஆகியோர் நடிக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று அரவிந்த்சாமியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் முதல் பார்வை வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிப்பதெல்லாம் எப்போதே ஒரு முறை நிகழக் கூடிய விஷயம். இயக்குனர் செல்வா இதற்கு முன் இயக்கிய 'நான் அவனில்லை' படத்தின் இரண்டு பாகங்களிலும் 5 ஹீரோயின்கள் நடித்திருந்தார்கள். இப்போது இயக்கி வரும் 'வணங்காமுடி' படத்தில் 4 ஹீரோயின்கள் நடித்து வருகிறார்கள்.
பொதுவாக ஒரு படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இடம் பெற்றாலே பல சச்சரவுகள் வரும் என்று சொல்வார்கள். அப்படியிருக்க இயக்குனர் செல்வா 4 ஹீரோயின்களை ஒரே படத்தில் நடிக்க வைத்து எப்படி திட்டமிட்டபடி படத்தை முடிக்கிறார் என்பதை வருங்கால இயக்குனர்கள் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.