சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
கடந்த இரண்டு வாரங்களாக 'மாட்டிறைச்சி தடை' குறித்த செய்திகள் தான் ஹாட் டாபிக் ஆக இருக்கிறது. மத்திய அரசின் இந்த தடை குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் சினிமா துறையில் இருந்து பெரிய அளவில் ஆதரவுக்குரலோ அல்லது எதிர்ப்புக்குரலோ கிளம்பவில்லை. கமல் மற்றும் நடிகர் சித்தார்த் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தான் திரையுலகில் இருந்து இதற்கான எதிர்ப்பு குரல் கிளம்பியது. தற்போது நடிகர் அரவிந்த்சாமியும், இந்த மாட்டிறைச்சி தடை குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார். குறிப்பாக இதில் தனது எதிர்ப்பை மறைமுகமாக வைத்து அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார் அரவிந்த்சாமி.
இதுபற்றி அவர் கூறுகையில், “ஊட்டச்சத்து குறைபாட்டினால் குழந்தைகள் சிரமப்படும் நாடுகளின் பட்டியலில் இந்தியா டாப் ரேங்கில் ஒன்றாக இருக்கிறது.. அதாவது உலகத்தில் பட்டினியால் வாடுவோர் பட்டியலில் 67/80 என்கிற இடத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவரது மேஜையில் இருந்து உணவுகளை எடுப்பதற்கு காரணங்களை கண்டுபிடிக்கிறோம்.. அதே செயல்பாட்டை அவர்களுக்கு ஆரோக்கியமான உணவை வழங்குவதிலும் காட்டவேண்டும்.. இதுதான் அனைத்து மதத்தினரின் விருப்பமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார் அரவிந்த்சாமி.