சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக நெடுவாசலில் மீண்டும் தொடங்கியுள்ள போராட்டத்தில் நடிகர் ஆரி கலந்து கொண்டார், அவருடன் விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் ஆரி நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ் நாட்டிலுள்ள விவசாய சங்கங்கள் அனைத்தும் அவர்களுக்குள் ஏதேனும் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அதனை கலைத்து ஒன்று சேர வேண்டும். இம்மண்ணையும், விவசாயத்தையும் காக்க மாணவர்கள் அனைவரும் இனி வரும் காலங்களில் மருத்துவராக வருவேன், நான் பொறியாளராக வருவேன், நான் கலெக்டராக வருவேன் என்கிற மனப்பான்மையை விடுத்து நாங்கள் விவசாயிகளாகவே தோன்றி இம்மண்ணில் விதைகளாவோம் என உறுதி கொள்ள வேண்டும். பெற்றோர்களும், எங்கள் பிள்ளைகளை விவசாயிகளாக மட்டுமே ஆக்குவோம் என்றும், மாணவர்களும் வரும் காலத்தில் விவசாயிகளாகவே வருவோம் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது விவசாயிகளுக்கு அனைத்து இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். இந்நேரத்தில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து விவசாய சங்கங்களும் ஒன்றிணைந்து இந்தியாவில் இருக்கும் அனைத்து விவசாய சங்கங்களை ஒருகிணைத்து போராட வேண்டும், அனைத்து விவசாய கடன்களையும் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றார் ஆரி.