சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவில் ஒரு சில முன்னணி இயக்குனர்கள் தான், கதாசிரியர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ந்து அவர்களுடன் பணியாற்றி வருகிறார்கள். அந்தவகையில் ஒரு காலகட்டத்தில் ஷங்கரின் ஆஸ்தான கதாசிரியராக மறைந்த எழுத்தாளர் சுஜாதா இருந்தார். அவரது மறைவுக்குப்பின் எழுத்தாளர் ஜெயமோகனும், இரட்டை எழுத்தாளர்களான சுபாவும் அந்த இடத்திற்கு வந்துள்ளனர். இதில் எழுத்தாளர்கள் சுபா, இயக்குனர் கே.வி.ஆனந்தின் படங்களில் ஆரம்ப காலம் தொட்டே தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.
கடந்த இரண்டு வருட வருடங்களுக்கு முன் மோகன் ராஜாவுடன் இணைந்து இரட்டையர்கள் சுபா பணியாற்றிய 'தனி ஒருவன்' படம் மெகா ஹிட் ஆனது. அந்தப்படம் தான் தெலுங்கில் ராம்சரண் நடிக்க 'துருவா' என்கிற பெயரில் ரீமேக்காகி ஹிட்டானது. இதை தொடர்ந்து தெலுங்கில் இருந்தும் சுபாவுக்கு அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன. இப்போது கல்யாண் ராம் நடிக்கும் புதிய படத்தில் கதாசிரியர்களாக பணியாற்றுவதன் மூலம் முதன்முறையாக தெலுங்கிலும் அடியெடுத்து வைக்கின்றனர் இந்த இரட்டை கதாசிரியர்கள். சித்தார்த் நடித்த '180' படத்தை இயக்கிய ஜெயேந்திரா தான் இந்தப்படத்தை இயக்குகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார்.