சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுத்தபோது அரசியல் குறித்த சில விசயங்களையும் பேசினார். ஆனால் இன்னும் அவர் வருவேனா வர மாட்டேனோ என்பதை தெளிவுபடுத்தவில்லை. ஒருவேளை வந்தால்... என்றுதான் பேசினார். அதற்குள் அவருக்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் ஒலித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகை கஸ்தூரி, நல்ல அரசியல் தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையிலும் டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்பதையே வருடக்கணக்கில் யோசிப்பவரால் எப்படி சாத்தியமாகும் என்று தனது டுவிட்டரில் குறிப்பிட்டவர், போர் போர் என்று சொல்லி போர் அடிக்காதீங்க என்று பதிவிட்டிருந்தார்.
இதற்கு ரஜினி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதற்கு நறுக்கென்று சிலருக்கு பதில் கொடுத்தார் கஸ்தூரி. அதில் ஒரு ரசிகர்கள் திரைத்துறையில் இருந்து கொண்டே இவ்வளவு கேவலமாக ரஜினியை விமர்சிப்பது சரியா...? என்று கேட்க, அதற்கு பதிலளித்துள்ள கஸ்தூரி, "தற்போது, நான் சிறுவயதில் இருந்தே ரஜினியின் ரசிகை. விரக்தியில் அப்படி விமர்சித்து விட்டேன். எல்லோரது மனதிலும் இருக்கிற ஆதங்கத்தைதான் நான் சொல்லியிருக்கிறேன்" என்று டுவிட் செய்துள்ளார்.