சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களிடம் பேசுகையில், அரசியல் தொடர்பாக வெளிப்படையாக எதுவும் தெரிவிக்கவில்லை. அதே நேரத்தில் போர் வரும் போது பார்த்து கொள்வோம், அது வரை பொறுமை காப்போம். நான் பச்சைத்தமிழன் என்று சஸ்பென்ஸ் வைத்து பேச்சை முடித்தார். ரஜினியின் இன்றைய பேச்சு குறித்து அரசியல் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் : ரஜினி என்னை சிறந்த நிர்வாகி என கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினி தேர்தலுக்கு வருவதைத்தான் போர் என்று மறைமுகமாக சொல்லி இருக்கிறார். அவரது பாணியில் சொல்வதென்றால், அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி.
தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் : முதல் நாள் பேசும் போது வந்து விடுவார் என்ற தோற்றம் இருந்தது. இன்று ஒரு எதிர்பார்ப்புடன் முடிந்துள்ளது. ஆனால் அவர், சிஸ்டம், அடிப்படை நிர்வாகம் சரி செய்யப்பட வேண்டும் என்கிறார். இதனை சரி செய்ய, மோடியை அவர் எடுத்துரைத்திருக்க வேண்டும். ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ஏன் புகழ்ந்தார் என்பது எனக்கு புரியவில்லை. நேரிடையாக போருக்கு வந்தால் வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறி தான்.
பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா : அவரது போர் என்ற மறைமுக பேச்சு தேர்தலுக்கு தயாராகி விட்டார் என்றே தோன்றுகிறது. அவர் அரசியலுக்கு வந்தால் தனிக்கட்சி துவங்கினாலும், எங்களுடன் இணைந்தாலும் வரவேற்கிறோம்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலர் முத்தரசன் : அரசியலில் எல்லாம் ஊழல் கலந்து விட்டது. தூய்மைாக இருக்க வேண்டும் என அவர் விரும்புவது வரவேற்கத்தக்கது. அரசியல் வருவது குறித்து அவர் வெளிப்படையாக அறிவிப்பாரானால் அதன் பின் எனது கருத்தை சொல்கிறேன்.
காங்., திருநாவுக்கரசர் : ரஜினி ஏறக்குறைய தான் அரசியலுக்கு வருவேன் என்ற அறிவிப்பின் முன்னோட்டமாக எடுத்து கொள்ளலாம். ஜனநாயக நாட்டில் கட்சி துவங்க யாருக்கும் உரிமை உள்ளது. ரஜினி மக்கள் செல்வாக்கு பெற்றவர். அவர் மக்களிடம் நம்பிக்கை பெற்றவர். அனைவராலும் மதிக்ககூடியவர். அவர் அரசியலுக்கு வந்தால் எந்த தேசிய கட்சியிலும் சேர மாட்டார். அவர் தனியாவே கட்சி ஆரம்பிப்பார்.
பா.ம.க., அன்புமணி ராமதாஸ் : ரஜினி என் இனிய நண்பர், நல்ல நடிகர். அவர் நடிப்பை பார்ப்போம், ரசிப்போம். தமிழகத்திற்கு தற்போது தேவை நடிகர் அல்ல, நல்ல நிர்வாக திறமையுள்ள நபர் தான். ஆக்டர் வேண்டாம், டாக்டர் தான் வேண்டும். கடந்த காலத்தில் தமிழகத்தை நடிகர்களிடம் ஒப்படைத்து நாசப்படுத்திவிட்டனர். எம்.ஜி.ஆர்., நடிகர், ஜெயலலிதா நடிகை, நடிகர்கள் தமிழகத்தை ஆட்சி செய்து நாசப்படுத்தினர். நடிகர்கள் தமிழகத்தை ஆண்டது போதும், நாட்டில் வேறு எங்கும் 50 ஆண்டுகள் நடிகர்கள் ஆட்சி செய்தது இல்லை.
முன்னாள் முதல்வர் ஓ.பி.எஸ்., : ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்று கொள்வதும், தீர்ப்பளிப்பதும் மக்கள் தான். அவரது அரசியல் பிரவேசம் காரணமாக அதிமுக என்னும் ஆலமரத்திற்கு பாதிப்பு வராது.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் : ரஜினி அரசியலுக்கு வந்தால் திருப்புமுனையாக அமையும். அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.
ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த முனுசாமி : ரஜினி அரசியலுக்கு வரட்டும், வந்தால் தான் களத்தில் இருக்கும் பிரச்னைகள் தெரியும்.
ஓ.பி.எஸ்., அணியை சேர்ந்த மா.பாண்டிய ராஜன் : ரஜினி அரசியலுக்கு வருவதாக தெரியவில்லை.
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் : ரஜினி தலைமை ஏற்று சேவை செய்யட்டும். ஆனால், முதல்வராகி, தலைமையேற்று தமிழ்மக்களை ஆள வேண்டும் என்ற எண்ணம் விட்டு விடலாம். அரசியலில் அளப்பரிய தியாகம் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் அவருக்கு சரிப்படாது.
ரசிகர்கள் கருத்து : ரஜினியுடன் புகைப்படம் எடுக்க வந்த ரசிகர்கள் நிருபர்களிடம் பேசுகையில், எங்கள் தலைவர் மக்களுக்கு நல்ல தீர்வு காண்பார். போர் என்று துவக்கியிருக்கிறார். அவர் முதல்வர் ஆகும் வரை போர் நடக்கும் என்றனர்.