சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாகுபலி- 2 படம் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எந்த பிரச்சனையும் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. பாகுபலி 2 படத்தின் தமிழ் பதிப்புதான் தொடக்கம் முதலே பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. பாகுபலி-2 தமிழ்ப்பதிப்பு உரிமையை வாங்கிய கே புரடக்ஷ்ன்ஸ், தமிழக தியேட்டரிகல் உரிமையை ஆஸ்கார் ரவியிடம் 45 கோடிக்கு விற்றார். அவர் பேசியபடி பணம் தராததினால் அவரிடமிருந்து திரும்ப வாங்கி ஸ்ரீக்ரீன் சரவணனிடம் விற்றார்.
அதை பல விநியோகஸ்தர்களுக்கு பிரித்து விற்பனை செய்த சரவணன், விநியோகஸ்தர்களிடம் வாங்கிய பணத்தை வைத்து தன்னுடைய கடனை அடைத்துவிட்டார். அதனால் தமிழ்நாட்டில் பாகுபலி-2 படம் ரிலீஸ் ஆக முடியாத சூழல் ஏற்பட்டு பிறகு சரிசெய்யப்பட்டது. ஆனாலும் க்யூப்புக்கு பணம் கட்டாமல் தினம் தினம் பஞ்சாயத்து ஏற்பட்டது.
இந்நிலையில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளது பாகுபலி-2. வளைகுடா நாடுகளில் இப்படத்தின் திரையிடல் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. என்ன காரணம்? 'பாகுபலி 2' படத்தின் இந்தி தவிர இதர மொழிகளின் வெளிநாட்டு உரிமையை ஒரு நிறுவனத்திற்கு கொடுத்திருந்தார்கள்.
இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பிரச்சினையினால் 2 வாரத்துக்கு மட்டுமே, கேடிஎம் எனப்படும் பட உரிமையை வளைகுடா நாடுகளுக்கு பாகுபலி 2 தயாரிப்பாளர் கொடுத்திருந்தார். அதனை ரத்து செய்துவிட்டதால், வளைகுடா நாட்டில் அனைத்து திரையரங்குகளிலும் பாகுபலி-2 படம் நிறுத்தப்பட்டுள்ளன.