பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி நிர்பயா என்ற மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அதையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேருக்கும் நீதிமன்றம் மரணதண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.
இந்த தீர்ப்பினை வரவேற்று பலரும் கருத்து கூறி வருகிறார்கள். இந்த நிலையில், நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில், திரையரங்கங்களில் படங்கள் திரையிடுவதற்கு முன்பாக தேசிய கீதம் திரையிடப்பட்டு வருகிறது. ஆனால் அதைவிட பாலியல் குற்றங்களுக்கு மரணதண்டனை என்று காட்டுவது அதிக தேசப் பற்றுடையதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன் என்று தனது கருத்தினை பதிவு செய்துள்ளார்.