மாதவனின் வருத்தம் | அந்தரங்க வீடியோ என வைரல் : ஸ்ருதி நாராயணன் காட்டமான பதில் | தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? |
மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி என்ற இரண்டு ஜாம்பவான்களுக்கு மத்தியில் தன் திரைப் பயணத்தை நடத்தியவர் ஜெமினி கணேசன். எம்.ஜி.ஆர் ஹீரோயிச ஸ்டைல்களால் மக்களை கவர்ந்தார். சிவாஜி உருக உருக நடித்து மக்களை கவர்ந்தார். ஆனால் ஜெமினி காதல் படங்களின் மூலம் தன்னை நிலை நிறுத்தினார்.
ஜெமினி கணேசன் சிவாஜியுடன் இணைந்து 25 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் எம்.ஜி.ஆருடன் நடிக்காமல் இருந்தார். எம்.ஜி.ஆர் அறிமுகப்படுத்தும் நடிகைகள் எல்லோருமே அடுத்த படத்தில் ஜெமினிக்கு ஜோடியாக நடித்து விடுவார்கள். இதனால் எம்.ஜி.ஆருக்கு ஜெமினி மீது கோபம் அதனால் இருவரும் சேர்ந்து நடிப்பதில்லை என்ற ஒரு பேச்சு அப்போது இருந்தது.
அதை மாற்ற விரும்பினார் எம்.ஜி.ஆர். 1966ம் ஆண்டு தேவர் பிலிம்ஸ் சார்பில் சாண்டோ சின்னப்பா தேவர் முகராசி என்ற படத்தை தயாரித்தார். இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெயந்தி, நம்பியார், நாகேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பதாக இருந்தது. இது ஒரு மர்டர் மிஸ்ட்ரி படம். அதாவது ஒரு கொலையை துப்பறியும் போலீஸ் அதிகாரியின் கதை. போலீஸ் அதிகாரியாக எம்.ஜி.ஆர் நடித்தார்.
இந்த கதையில் போலீஸ் அதிகாரியின் அண்ணன் கேரக்டர் மிகவும் முக்கியமானது. அப்போது எம்.ஜி.ஆரின் அண்ணனாக நடிக்க அசோகன், பாலாஜி, எம்.ஜி.சக்ரபாணி ஆகியோரது பெயர்கள் வழக்கம்போல பரிசீலிக்கப்பட்டது. இந்த கேரக்டரில் ஜெமினி நடித்தால் நன்றாக இருக்கும் கேட்டுப் பாருங்கள் என்றார் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரே தன்னை தேர்வு செய்தார் என்று தெரிந்தவுடன் மறுப்பு ஏதும் சொல்லாமல் நடித்தார் ஜெமினி. படத்தை 12 நாட்களில் எடுத்து முடித்தார். டைரக்டர் எம்.ஏ.திருமுகம். படம் 100 நாட்கள் ஓடி வெற்றி பெற்றது. ஆனாலும் எம்.ஜி.ஆரும், ஜெமினி கணேசனும் மீண்டும் இணைந்து நடிக்கவில்லை.