சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இந்திய சினிமாவே எதிர்பார்க்கும் பிரமாண்ட படமான பாகுபலி-2 நாளை வெளியாக உள்ள நிலையில் தமிழில் மட்டும் வெளியாகுமா...? ஆகாதா...? என்ற கடைசிநேர டென்சன் நீடித்து வந்தது. ஆனால் இப்போது அந்த டென்சனும் தீர்ந்துள்ளது. பாகுபலி-2 படத்திற்கு தடை விதிக்க கோரி சென்னை ஐகோர்ட் மறுத்துவிட்டது.
கார்த்திகேயன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு ஒன்று தொடர்ந்தார். அதில் பாகுபலி-2 படத்தை தமிழில் வெளியிடும் கே புரொடக்ஷன்ஸ் தன்னிடம் வாங்கிய கடனை வட்டியுடன் சேர்த்து ரூ.1.48 கோடி செலுத்த வேண்டும், இல்லையேல் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும், அனைத்து உரிமையையும் முடக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கூறியதுடன், உரிமை தொடர்பான வழக்கை நாளைக்கு ஒத்தி வைத்தார். இதன்மூலம் பாகுபலி-2 வெளியாவதில் நீடித்த சிக்கல் தீர்ந்தது. திட்டமிட்டப்படி பாகுபலி-2 படம் தமிழில் நாளை வெளியாகிறது.