சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தென்னிந்திய சினிமா மற்றும் தொலைக்காட்சி டப்பிங் கலைஞர்கள் சங்கத்தினருக்கு சங்கம் மூலமே சம்பளம் கொடுக்கப்பட்டு வந்தது. தயாரிப்பாளர்களிடம் சங்கம் வசூலித்துக் கொடுக்கும். இதை எதிர்த்து சங்க உறுப்பினர்கள் மதியழகன், மகாலட்சுமி, கண்ணன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீமன்றம் சங்கத்தின் மூலம் சம்பளம் வசூலித்துக் கொடுப்பதே சரியான வழி என்று தீர்ப்பு வழங்கியது.
இதை தொடர்ந்து சங்கத்தின் தலைவர் கே.ஆர்.செல்வராஜ் பொதுச்செயலாளர் எம்.ராஜேந்திரன், பொருளாளர் டி.என்.பி.கதிரவன் தலைமையில் சங்கத்தின் அவசரக் கூட்டம் நடந்தது. பின்னர் தலைவர் செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நீதிமன்றத்தின் தீர்ப்பின் படி இனி சம்பளம் சங்கத்தின் மூலமே டப்பிங் கலைஞர்களுக்கு வழங்கப்படும். சம்பளத்தில் 10 சதவிகிதம் சங்கதின் நலநிதிக்காக பிடித்துக் கொள்ளப்படும். இந்தப் பணமும் சங்க உறுப்பினர்களின் நலனுக்காகத்தான் பயன்படுத்தப்படும். சங்கத்தின் தேர்தலை எதிர்த்து ரத்தினகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்துள்ளர். அந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. தீர்ப்பு வந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றார்.