சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத்திற்கு சினிமா துறையின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
1930-ம் ஆண்டு, பிப்., 19-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர் காசிநாதுனி விஸ்வநாத் எனும் கே.விஸ்வநாத். சினிமாவில் சவுண்ட் டிசைனராக அறிமுகமாகி, இயக்குநர், நடிகர் என் பன்முகம் காட்டியவர். இவர் இயக்கிய சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து... என 25-க்கும் மேற்பட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கியுள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது ஹிந்தி, தமிழ் மொழிகளிலும் பிரபலமான இயக்குநராக திகழ்ந்தார்.
இயக்குநராக மட்டுமல்லாது குருதிப்புனல், முகவரி, காக்கை சிறகினிலே, யாரடி நீ மோகினி, ராஜபாட்டை, உத்தம வில்லன், லிங்கா... என நிறைய தமிழ் படங்களில் நடிகராகவும் அசத்தியுள்ளார். ஏற்கனவே பத்மஸ்ரீ விருது, 5 முறை தேசிய விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ள கே.விஸ்வநாத்திற்கு இப்போது மற்றொரு மகுடமாக இந்தாண்டு அவருக்கு தாதா சாகேப் பால்கே விருதும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அரசால் சினிமா துறையில் வழங்கப்படும் மிகப்பெரிய விருதாக இந்த விருது கருதப்படுகிறது.