அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
சின்னத்திரை நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திக் கடந்த சில தினங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில் தன் மகன் சாவுக்கு நந்தினியும், அவரது தந்தையும்தான் காரணம் என்று கணவரின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் என்னை நிம்மதியாக வாழ விடுங்கள் என்று மைனா நந்தினி உருக்கமா கூறி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: காதலித்து திருமணம் செய்து கொண்டதுதான் நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு. அவருடன் வாழ்ந்த காலத்தில் சந்தோஷமாகத்தான் இருந்தேன். கடந்த 3 மாமாக ஒத்துப்போகவில்லை. அவரது அன்பு அக்கறை குறையத் தொடங்கியது. அதனால் விலகி இருந்தேன். அவரது திடீர் மரணம் என் வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. அதைவிட அவரது பெற்றோர்கள் என்மீது சுமத்தும் அவதூறுகளைத்தான் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு பெண்ணாக எல்லா அமானங்களையும் சந்தித்து விட்டேன். நான் ஏமாந்து விட்டேன். ஏமாற்றப்பட்டுவிட்டேன் என்பதை மட்டும் என்னால் உணரமுடிகிறது.