சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தமிழில் முதன் முறையாக நடிக்கும் படம் 'ஸ்பைடர்'. இந்தப் படத்தில் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடிக்க எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார். படம் ஆரம்பமான நாளிலிருந்து படத்தின் தலைப்பை அறிவிக்காமலே இருந்தார்கள். படத்தின் வெளியீட்டுத் தேதியைக் கூட அறிவித்தார்கள், ஆனால் தலைப்பை மட்டும் அறிவிக்கவேயில்லை. நேற்றுதான் ஒரு வழியாக 'ஸ்பைடர்' என்ற தலைப்பை அறிவித்தார்கள். ஆங்கிலத்தில் தலைப்பு இருப்பதால் தமிழ்நாட்டில் வரி விலக்கு கிடைக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகியவற்றிற்கு ஒரே தலைப்புதான் இருக்க வேண்டும் என்பதால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்துள்ளார்களாம்.
படத்தின் சாட்டிலைட் உரிமையை ஜீ டிவி சுமார் 26 கோடி ரூபாய் கொடுத்து வாங்கிவிட்டதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளுக்கும் சேர்த்து அந்த விலையாம். சமீப காலமாக பெரிய படங்களை வாங்குவதில் தொலைக்காட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தையும் ஜீ டிவிதான் 110 கோடி கொடுத்து வாங்கியது. இப்போது திரையுலகில் அடுத்து எதிர்பார்க்கப்பட்டு வரும் 'ஸ்பைடர்' படத்தையும் வாங்கி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
'ஸ்பைடர்' படத்தின் முதல் பார்வை நேற்று வெளியானதைத் தொடர்ந்து ரசிகர்களும், திரையுலகினரும் அதைப் பெரிதும் பாராட்டி வருகிறார்கள். சர்ச்சை டிவிட்டர் பதிவாளரான இயக்குனர் ராம்கோபால் வர்மா 'கடவுள் போல இருக்கிறார் மகேஷ்பாபு' என பாராட்டித் தள்ளியுள்ளார். யு டியூபிலும் முதல் பார்வை 6 லட்சம் பார்வைகளைத் தாண்டியுள்ளது. படத்தின் வெற்றியை மகேஷ் பாபு ரசிகர்கள் இப்போதே உறுதி செய்துவிட்டார்கள்.