சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் '2.0' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதிக் கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இப்படத்தை அடுத்து ரஜினிகாந்த், 'கபாலி' படத்தை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார். தனுஷ் தயாரிக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாகலாம் எனத் தெரிகிறது. இப்படத்தை குறுகிய கால படைப்பாக உருவாக்க போவதாக தகவல். அனேகமாக இந்த ஆண்டிற்குள் படத்தை முடித்து விடுவார்கள் என்கிறார்கள்.
பா.ரஞ்சித் இயக்கிய படத்திற்குப் பிறகு 'பாகுபலி' படத்தை இயக்கிய எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று நடைபெற்ற 'பாகுபலி 2' படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பில் “ரஜினியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எனது ஆவல். நிச்சயம் விரைவில் அவர் நடிக்கும் படத்தை இயக்குவேன்” என்று சொல்லியிருக்கிறார். இதற்கு முன் ரஜினி கூட ராஜமௌலி இயக்கத்தில் நடிக்க ஆவலாக உள்ளேன் என்று பேசியுள்ளார்.
'பாகுபலி 2' வெளியீட்டிற்குப் பிறகு ராஜமௌலி ஓய்வெடுக்கச் செல்வார் என்றும், அதன் பின் அவர் ரஜினி நடிக்கும் கதையை எழுதலாம் என்றும் தெரிகிறது. அதற்குள் ரஜினியும், ரஞ்சித் இயக்கும் படத்தில் நடித்து முடித்துவிடுவார். எல்லாம் சரியாகக் கூட வந்தால் அடுத்த ஆண்டில் ராஜமௌலி - ரஜினிகாந்த் என்ற பிரம்மாண்ட புதிய கூட்டணியை எதிர்பார்க்கலாம்.