சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் சினிமாவையும் தாண்டி, தெலுங்கு, ஹிந்தி வரை சென்று வெற்றி பெற்றவர் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். தற்போது மகேஷ்பாபுவை வைத்து தமிழ்-தெலுங்கு இரண்டு மொழியிலும் ஒரு படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் நேற்று தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டன. ஜோக்கர், 24 படங்கள் தலா 2 விருதுகளும், எழுத்தாளர் தனஞ்செயன் மற்றும் சிறந்த பாடலாசிரியர் கவிஞர் வைரமுத்து என மொத்தம் 6 விருதுகள் தமிழுக்கு கிடைத்தன.
இந்நிலையில் தேசிய விருது கமிட்டியை விமர்சனம் செய்திருக்கிறார் ஏஆர்.முருகதாஸ். முருகதாஸ், தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛சிபாரிசுகளின் பேரில் தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. தேர்வுகுழு பாரபட்சமாக செயல்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
தேசிய விருது தேர்வு கமிட்டின் தலைவராக தென்னிந்திய புகழ் இயக்குநர் பிரியதர்ஷன் இருப்பது குறிப்பிடத்தக்கது.