ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
1984ம் ஆண்டு வெளிவந்த படம் நல்லவனுக்கு நல்லவன். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். விசு வசனம் எழுதியிருந்தார். ரஜினி, கார்த்திக், ராதிகா நடித்திருந்தார்கள். இளையராஜா இசை அமைத்திருந்தார். பாபு ஒளிப்பதிவு செய்திருந்தார். ‛‛உன்னைத்தானே தஞ்சம் என்று நம்பி வந்தேன் மானே..., சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது..., நம்ம முதலாளி நல்ல முதலாளி..., வச்சுக்கவா உன்னை மட்டும் நெஞ்சுக்குள்ள...'' போன்ற சூப்பர் ஹிட் பாடல்கள் இடம்பெற்ற படம்.
இந்தப் படம் தெலுங்கில் வெளிவந்த தர்மாத்முடு என்ற படத்தின் ரீமேக். யாருக்குமே அடங்காத தாதா ஒரு பெண்ணின் அன்புக்கு அடங்கி செய்த தவறுக்காக சிறை சென்று திரும்பி, ஒரு தொழிலாளியாக தன் வாழ்க்கையை தொடங்கி அதன் பிறகு படிப்படியாக முன்னுக்கு வருகிற மாதிரியான கதை. இந்த படம் குடும்ப செண்டிமென்ட் கலந்த ஆக்ஷன் படம். ஆனால் தெலுங்கு படத்தில் உருக்கமான கிளைமாக்ஸ் இருந்தது. அதேபோன்று தமிழிலும் உருக்கமான கிளைமாக்ஸ் வைத்திருந்தார் எஸ்.பி.முத்துராமன்.
ஆனால் இந்த கிளைமாக்ஸ் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணனுக்கு பிடிக்கவில்லை. அதிரடி ஆக்ஷன் படமாக காட்டிவிட்டு உருக்கமான கிளைமாக்ஸ் வைத்தால் எடுபடாது என்றார். படம் சென்சாராகி இருந்தது. அதன்பிறகு கார்த்திக்கை எதிரிகள் கடத்தி விடுவது போலவும் அவரை ரஜினி சண்டை போட்டு காப்பாற்றி வருவது போலவும் இன்னொரு கிளைமாக்ஸ் எடுத்து அதற்கென்று தனியாக தணிக்கை சான்றிதழ் வாங்கினார்கள். அதன் பிறகு இயக்குனர்கள், தயாரிப்பாளாகள், ரசிகர்கள் என பலரை அழைத்து இரண்டு கிளைமாக்சையும் போட்டுக் காட்டியதில் ஆக்ஷன் கிளைமாக்ஸ்தான் சரி என்ற எல்லோரும் சொல்ல அந்த கிளைமாக்சுடன் படம் வெளிவந்து பெரும் வெற்றி பெற்றது.