சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
நிலமோசடி புகார் தொடர்பாக நடிகர் வடிவேலு தொடுத்த வழக்கில் வடிவேலு மற்றும் சிங்கத்து ஆகியோரை நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவிட்டுள்ளது, இல்லையேல் கைது வாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரித்துள்ளது. வடிவேலு - சிங்கமுத்து கூட்டணியில் வெளியான காமெடிகள் ரசிகர்களை மகிழ்வித்த வேளையில் அவர்களுக்குள் ஏற்பட்ட மோதல் 10 ஆண்டுகளை கடந்தும் நீடித்து வருகிறது.
தாம்பரம் அருகே நிலம் வாங்கியது தொடர்பாக, தன்னை மோசடி செய்துவிட்டதாக சிங்கமுத்து உள்ளிட்ட 6 பேர் மீது கடந்த 2010-ம் ஆண்டில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார் வடிவேலு. இந்த வழக்கு நீண்ட ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதோடு வடிவேலு மற்றும் சிங்கமுத்துவை நேரில் ஆஜராக சொல்லி நீதிபதி முரளிதரண் உத்தரவிட்டடிருந்தார். ஆனால் இருவரும் ஆஜராகவில்லை. இதனால் வருகிற ஏப்., 20-ம் தேதி வடிவேலு மற்றும் சிங்கமுத்து இருவரும் நேரில் ஆஜராக வேண்டும், இல்லையேல் பிடிவாரண்ட் பிறக்கப்படும் என நீதிபதி உத்தரவிட்டதோடு, வழக்கையும் 20-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.