சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
திருமணத்துக்குப் பிறகு அருள்நிதி நடித்த படம் - 'ஆறாது சினம்'. அறிவழகன் இயக்கிய இந்தப்படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. அதனால் அப்ஸெட்டான அருள்நிதி, நடிப்புக்கு பிரேக் கொடுத்துவிட்டு தனக்கு பிரேக் கொடுக்கும் அளவுக்கு பொருத்தமான கதைகளை தேர்வு செய்யும் திட்டத்தில் கதைகளை கேட்க ஆரம்பித்தார்.
அழகிய தீயே, மொழி, உப்புக்கருவாடு போன்ற படங்களை இயக்கிய ராதா மோகன் சொன்ன ஒரு கதை அருள்நிதிக்கு பிடித்துப்போனது. உடனடியாக அந்தப் படத்தை தொடங்க சொன்னார். 'பிருந்தாவனம்' என பெயரிடப்பட்ட அந்தப் படத்தில்தான் தற்போது பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
பாலிவுட்டில் வெளியான ஷாருக்கானின் ஃபேன் பட ஸ்டைலில், ஒரு நடிகருக்கும் அவருடைய ரசிகர் ஒருவருக்கும் இடையே நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
'பிருந்தாவனம்' படத்தில் காது கேளாதவராக நடிக்கிறார் அருள்நிதி. 'பலே வெள்ளையத் தேவா' படத்தில் நடித்த தன்யா பாலகிருஷ்ணன் 'பிருந்தாவனம்' படத்திலும் நாயகியாக நடிக்கிறார். இந்தப்படத்தை முடித்ததும், அறிமுக இயக்குனர் மு.மாறன் இயக்கத்தில் 'இரவுக்கு ஆயிரம் கண்கள்' என்ற படத்திலும் நடிக்கிறார் அருள்நிதி.