ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். இதில் ஏற்கனவே தாணுவின் வழிகாட்டுதலில் செயல்படும் டி.சிவா அணி, ராதாகிருஷ்ணன் அணியில் இணைந்து ஓரணியாக மாறினார். இதற்கான நிகழ்ச்சி கடந்தவாரம் நிகழ்ந்தது. அப்போது பேசிய தாணு, விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு தகுதியற்ற விஷால் இந்த பதவிக்கு வரக்கூடாது, அவரை தோற்கடிக்க கேயார், ஜி.சேகரன் ஆகியோரும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கலைப்புலி ஜி.சேகரன் அணியினர், இன்று(மார்ச் 29ம் தேதி) ராதா கிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது தாணு முன்னிலையில் ராதாகிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார் ஜி.சேகரன்.
இதன்மூலம், விஷாலை தோற்கடிக்க மூவர் அணி, ஓரணியாக இணைந்துள்ளனர். இதில் யார் வெல்லபோகிறார்கள் என்று ஏப்.,2-ம் தேதி தெரிந்துவிடும்.