சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷாலை தோற்கடிக்க வேண்டும் என்ற ஒரே நோக்கில் தனித்தனியாக போட்டி போட்ட மூன்று அணியினர் இப்போது ஓரணியாக இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற ஏப்., 2-ம் தேதி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் விஷால், ராதாகிருஷ்ணன், டி.சிவா, கலைப்புலி ஜி.சேகரன் மற்றும் கேயார் என ஐந்து பேர் தலைமையிலான அணியினர் களம் இறங்கினர். இதில் ஏற்கனவே தாணுவின் வழிகாட்டுதலில் செயல்படும் டி.சிவா அணி, ராதாகிருஷ்ணன் அணியில் இணைந்து ஓரணியாக மாறினார். இதற்கான நிகழ்ச்சி கடந்தவாரம் நிகழ்ந்தது. அப்போது பேசிய தாணு, விஷாலை கடுமையாக தாக்கி பேசினார். அதோடு தகுதியற்ற விஷால் இந்த பதவிக்கு வரக்கூடாது, அவரை தோற்கடிக்க கேயார், ஜி.சேகரன் ஆகியோரும் தங்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
இந்நிலையில் கலைப்புலி ஜி.சேகரன் அணியினர், இன்று(மார்ச் 29ம் தேதி) ராதா கிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தனர். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது தாணு முன்னிலையில் ராதாகிருஷ்ணனுக்கு தங்களது ஆதரவை தெரிவித்தார் ஜி.சேகரன்.
இதன்மூலம், விஷாலை தோற்கடிக்க மூவர் அணி, ஓரணியாக இணைந்துள்ளனர். இதில் யார் வெல்லபோகிறார்கள் என்று ஏப்.,2-ம் தேதி தெரிந்துவிடும்.