பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் |
இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு உதவும் வகையில் லைகா நிறுவனத்தின் ஞானம் அறக்கட்டளை சார்பில் 150 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இதை தமிழர்களுக்கு வழங்கும் விழா ஏப்., 9-ம் தேதி இலங்கையில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த்தும் பங்கேற்பதாக இருந்தது. ஆனால் இங்குள்ள சில அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால், தனது பயணத்தை ரத்து செய்துவிட்டார். ஆனாலும் இனி இதுபோன்ற செயல்களை தடுக்காதீர்கள் என்று ரஜினி வேண்டுகோளும் வைத்தார்.
ரஜினி, இலங்கை பயணத்தை ரத்து செய்ததை சிலர் விமர்சனமும் செய்தனர். இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்கு ரஜினி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் இலங்கை தமிழர்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
அந்த கடிதத்தில் ரஜினி மேலும் கூறியுள்ளதாவது: ‛‛இலங்கை தமிழர்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை ஊடகங்கள் மூலம் அறிந்தேன். இதற்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். நேரம் கூடி வரும்போது சந்திப்போம். நீங்கள் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.