சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி நடிகர் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், நடிகர் கமல்ஹாசன் தனியார் டிவி., ஒன்றுக்கு பேட்டியளித்தார். இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த கமல், மகாபாரதத்தை மேற்கோள் காட்டி தனது விளக்கத்தை கொடுத்தார்.
இந்துக்களின் தெய்வநூலாக போற்றி வரும் மகாபாரதம் மற்றும் இதிகாசத்தை கொச்சைப்படுத்தும் கமலை கண்டிக்கிறோம் என்று கூறி இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தது.
இருதினங்களுக்கு முன்னர் கன்னியாகுமரி மாவட்டம், அஞ்சுகிராமத்தை சேர்ந்த ஆதிநாதசுந்தரம் என்பவர் நெல்லை வள்ளியூர் குற்றவியல் கோர்ட்டில் இதேகருத்தை வலியுறுத்தி கமல் மீது நடவடிக்கை கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், கும்பகோணத்திலும் கமல் மீது வழக்கு பதிவு செய்ய கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்து மக்கள் கட்சியின், கும்பகோணம் மாவட்ட செயலாளர் பாலா என்பவர், கும்பகோணம் 2வது மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் மகாபாரதத்தை இழிவுப்படுத்தியதாக கூறி கமல் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டி மனு தாக்கல் செய்திருக்கிறார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு ஏற்று கொள்ளப்பட இருக்கிறது.