அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் | ஜூனியர் என்டிஆரை இயக்கும் அஜய் ஞானமுத்து? | ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் |
1980 இளையராஜாவின் பொற்காலம். அவர் பெயர் படத்தில் இடம் பெற்றிருந்தாலே படம் ஹிட் என்றிருந்த காலம். அப்போது அவர் உருவாக்கிய பாடல்கள் அனைத்தும் இப்போது 80களின் கதைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இப்போது களத்தூர் கிராமம் என்ற படம் 1980களில் நடக்கும் ஒரு கிராமத்து படமாக உருவாகி வருகிறது. இதற்கு இளையராஜா 80களின் பாணிக்கு திரும்பி அற்புதமான மண் மனக்கும் பாடல்களை உருவாக்கி வருகிறார்.
ஏ.ஆர்.வி பாரடைஸ் சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரிக்கும் களத்தூர் கிராமம் படத்தை அறிமுக இயக்குனர் சரண் கே.அத்வைத்தன் இயக்குகிறார். கிஷோர்குமார், யக்னா ஷெட்டி, கலீல்குமார், மிதுன் குமார், ரஜினி மகாதேவய்யா என்ற புதுமுகங்கள் நடிக்கிறார்கள். புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
படத்தை பற்றி இயக்குனர் சரண் கே.அத்வைத்தன் கூறியதாவது: ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்தாலே, நம் உள்ளங்களில் ராஜா சாரின் பாடல்கள் தானாக ஒலிக்க ஆரம்பித்து விடும். அப்படி தான், இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த அடுத்த கணமே, ராஜா சாரின் இசை தான் எங்கள் கதைக்கு மிக சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா, எங்கள் படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்தார்.
படத்தின் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்களை களத்தூர் கிராமம் படத்திற்காக உருவாக்கி இருக்கிறார் இளையராஜா என்கிறார் இயக்குனர்.