சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இசை அமைப்பாளர் இளையராஜா தான் இசை அமைத்த பாடல்களை எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட எந்த பாடகரும் மேடையில் பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பி உள்ளார். இது பாடகர் பாடகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளையராஜாவின் இந்த முடிவு பின்னணி பாடர்களின் எதிர்காலத்தை இருளாக்கி விடும் என்று பிரபல பின்னணி பாடகி சுனிதா அச்சம் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது:
இளையாராஜா மகத்தான இசைக் கலைஞர். அவரை தவிர்த்து விட்டு தமிழ் திரையிசை வரலாற்றை எழுத முடியாது. அவர் பாடல்கள் இல்லாமல் இசை நிகழ்ச்சிகள் நடத்தவே முடியாது. இப்போது அவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மட்டும்தான் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நாளை எல்லா பாடகர்களுக்கும் நோட்டீஸ் வரலாம். இளையராஜாவை பின்பற்றி மற்ற இசை அமைப்பாளார்களும் எங்கள் பாடலை பாடக்கூடாது என்று நோட்டீஸ் அனுப்பினால் பின்னணி பாடகர்களின் எதிர்காகலம் இருளடைந்து விடும். இதுகுறித்து இளையராஜா தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். என்கிறார் சுனிதா.