சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தன் இசையில் உருவான பாடல்களை, உரிய அனுமதியின்றி பாடினால், சட்ட ரீதியான நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என, பின்னணி பாடகர், எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு, இசையமைப்பாளர் இளையராஜா, நோட்டீஸ் அனுப்பினார். இதனால், இனி, இளையராஜா இசையமைத்த பாடல்களை பாட மாட்டேன் என, எஸ்.பி.பி., அறிவித்தார். இந்த விஷயத்தை மேலும் பரபரப்பாக்க வேண்டாம். இறைவன் படைப்பில் அனைவரும் நல்லவர்கள்; சமமானவர்கள் என, குறிப்பிட்டுள்ளார். இந்த விவகாரம், சமூக வலை தளங்களில், கருத்து மோதல்களை ஏற்படுத்தி உள்ளன. ஆதரவாகவும், எதிராகவும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.
மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தன் டுவிட்டர் பக்கத்தில், ‛‛இளையராஜா - எஸ்.பி.பி.,யின் மோதல் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது. இதில், விரைவில் சுமுக தீர்வு கிடைக்கும் என, நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.