சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
யார் ரசிகருக்கு உதவினார் சூர்யா, அதற்கு ஏன் விஜய் நன்றி சொல்கிறார் என்கிற கேள்வி நிச்சயம் தலைதூக்கவே செய்யும். விஜய் ரசிகருக்குத்தான் சூர்யா உதவினார், அதற்குத்தான் நன்றி கூறியுள்ளார் விஜய். என்ன உதவி செய்தார் சூர்யா..? அதற்கு முன் ஒரு சின்ன பிளாஸ்பேக் ஒன்றை பார்த்து விடுவோம் ‛சி-3' பட புரமோஷனுக்காக கடந்த ஜனவரி மாதம் கேரளாவுக்கு சென்றிருந்த சூர்யா, திருவனந்தபுரத்தில் உள்ள தனது ரசிகர்களையும் சந்தித்தார். அதில் ஒரு மாற்றுத்திறனாளி ரசிகர் தன்னை பார்க்க துடிப்பதை அறிந்து அவரை அருகில் வரவழைத்து பேசினார்..
அப்போதுதான் அவர் விஜய் ரசிகர் என்பது தெரிய வந்தது, அவர் தன் கையில் உள்ள கிப்ட் பார்சல் ஒன்றை சூர்யாவிடம் கொடுத்து, இதை தனது சார்பில் விஜய்யிடம் சேர்த்துவிட முடியுமா என கேட்டுள்ளார்.. ரசிகர் தன்னை தேடிவந்து உதவி கேட்டதில் நெகிழ்ந்த சூர்யா, மகிழ்சியுடன் சம்மதித்தார். அந்த பரிசுப்பொருளை சமீபத்தில் ஸ்டுடியோகிரீன் நிறுவனத்தை சார்ந்து முக்கிய நபர் வாயிலாக விஜய்யிடம் ஒப்படைக்கவும் ஏற்பாடு செய்தார்.
சம்பந்தப்பட்ட நபர் விஜய்யின் மேனேஜர் மூலமாக விஷயத்தை விஜய்யின் காதுகளுக்கு கொண்டு செல்ல, அவரை தான் தற்போது நடித்து வரும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கே வரச்சொன்னார் விஜய். கேரள ரசிகர் கொடுத்த கிப்ட்டை பெற்றுக்கொண்டதுடன், அதனை முழு மனதுடன் தன்னிடம் சேர்க்க உதவிய சூர்யாவுக்கு தனது மனப்பூர்வமான நன்றியை தெரிவித்துக்கொண்டார். விஜய் தனது புதிய படத்துக்காக வித்தியாசமான கெட்டப்பில் இருப்பதை பார்த்து அசந்துபோன சூர்யாவின் பிரதிநிதி வேறு வழியின்றி விஜய்யுடன் இணைந்து போட்டோ எடுக்காமல் வருத்ததுடன் திரும்பி வந்தாராம்.