சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தேசிய மற்றும் தனியார் வங்கிகளில் இனி கணக்கு வைத்திருக்க வேண்டுமானால் 5 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய் கட்டாய இருப்புத் தொகை வைத்திருக்க வேண்டும். ஆனால் தபால் அலுவலகத்தில் கணக்கு தொடங்கினால் 50 ரூபாய் இருப்பு இருந்தால் போதும். இதனால் பலரும் தற்போது தபால் நிலையத்தில் கணக்கு தொடங்கி வருகிறார்கள். தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடிகர் ஆரி, மாணவர்களுடன் இணைந்து ஒரு விழிப்புணர்வு திட்டத்தை தொடங்கியுள்ளார். மக்களை சந்தித்து தபால் நிலையத்தில் கணக்கு தொடங்க விழிப்புணர்வு ஏற்படுத்துவதே இதன் நோக்கமாகும். இதுகுறித்து ஆரி கூறியிருப்பதாவது:
வங்கிக் குளறுபடிகளினால் பாதிக்கப்படும் சாமன்ய மக்களுக்கு தீர்வாக அஞ்சலகங்களில் 50 ரூபாய் கையிருப்பில் அனைத்து வகை பயன்பாடுகளும் கொண்ட கணக்கை துவக்கும் மாற்று வழியை மக்களிடத்தில் பரப்புவதில் ஒரு தமிழனாய் இந்த விழிப்புணர்வு புரட்சியை, மாணவச் சகோதர சகோதரிகளுடன் இணைந்து ஆரம்பித்ததில் நான் பெருமை கொள்கிறேன். இந்தச் செய்தியை விழிப்புணர்வை மக்களிடம் பரப்புவோம். நாம் மாறினால் மாற்றங்கள் உருவாகும். மக்களிடமும் மாற்றத்தை உருவாக்குவோம். தமிழனாய் நான் உருவாக்கிய இந்த மாற்றம் இந்தியா முழுவதும் உருவாக வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். இதற்கு ஒத்துழைப்பு தந்த மாணவர்களுக்கு என் மனம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.