சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு | வீர தீர சூரன் படத்தில் மூன்று தோற்றத்தில் நடிக்கும் விக்ரம் |
நடிகர் சங்கத்தில் சரத்குமார், ராதாரவியின் நிர்வாகம் சரியில்லை என்று சொல்லி, தேர்தலில் களமிறங்கிய விஷால் அதில் வெற்றி பெற்றார். அதையடுத்து தயாரிப்பாளர் சங்கத்திலும் முறைகேடு நடப்பதாக சொன்னார். குறிப்பாக, சிறிய பட்ஜெட் படங்களுக்கு எந்தவித உதவியும் செய்வதில்லை. சில குறிப்பிடத்தக்க தயாரிப்பாளர்களின் படங்களுக்கு மட்டுமே தயாரிப்பாளர் சங்கத்தினால் பலன் கிடைத்து வருகிறது, அந்த நிலையை மாற்றப்போகிறேன் என்று சொல்லிக்கொண்டு தற்போது தயாரிப்பாளர் சங்கத்தலைவர் பதவிக்கும் போட்டியிட களமிறங்கியுள்ளார் விஷால்.
அவருக்கு ஆதரவாக இயக்குனர் மிஷ்கின், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவும் வெளியூர்களில் உள்ள தயரிப்பாளர்களின் வீடுவீடாக சென்று ஓட்டு சேகரித்து வருகின்றனர். அப்படி நேற்று கோவைக்கு சென்ற விஷால், கடந்த பத்து ஆண்டுகளாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் செயல்படவே இல்லை. ஒரு குறிப்பிட்ட சிலர் மட்டுமே தங்களது சுய ஆதாயத்துக்காக சங்கத்தை பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், சமீபகாலமாக படங்கள் சரியாக ஓடுவதில்லை. இதற்கு காரணம் திருட்டு விசிடி. அதனால் எங்கள் அணி தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்று நான் தலைவர் ஆனால், தயாரிப்பாளர் சங்கம் முழுமையாக செயல்படும். முக்கியமாக, திருட்டு விசிடியை ஒழிப்பதைத்தான் முதல் வேலையாக எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார்.