சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
பாடகர், இசையமைப்பாளர், காமெடியன் என பல முகம் காட்டிக் கொண்டு, சினிமாவில் வண்டியை ஓட்டிக்கொண்டிருக்கும் பிரேம்ஜிக்கு ஹீரோவாக நடிக்க வேண்டும் என்ற ஆசை. அந்த ஆசையின் காரணமாக மாங்கா உட்பட ஒன்றிரண்டு படங்களில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார். ஆனால் அவர் நடித்த படங்கள் திரைக்கு வரவில்லை. எனவே, மீண்டும் காமெடியனாக நடித்தார்.
அதன்படி காமெடியனாக நடிக்க ஆரம்பித்த பிரேம்ஜிக்கு வந்த படம்தான் 'சிம்பா'. அறிமுக இயக்குனர் அரவிந்த் ஸ்ரீதர் இயக்கத்தில் பரத், புதுமுகங்கள் பானு மெஹ்ரா, ஸ்வாதி தீக்ஷித் முக்கிய பாத்திரங்களில் நடிக்கும் 'சிம்பா' படத்தை தமிழின் முதல் STONER திரைப்படம் என்று சொல்கின்றனர். இப்படியொரு டேக் லைனுடன் வெளியாகவிருக்கும் சிம்பா படத்தில் பிரேம்ஜி, நாய் வேஷம் எல்லாம் போட்டு நடித்துள்ளாராம்.
சிம்பா படத்தின் கதைப்படி, கஞ்சா போதைக்கு அடிமையான பரத், கஞ்சா அடித்துவிட்டு ஒரு அறைக்குள்ளேயே முடங்கி கிடப்பவர். பிரேம்ஜியை பார்க்கும்போதெல்லாம் பரத் கண்களுக்கு பிரேம்ஜி ஒரு நாய் போன்று தோன்றுவாராம். இதனால் பிரேம்ஜி நாய் 'கெட்-அப்'பில் நடித்துள்ளார்.