சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
உலக அளவில் பெருமைபடக் கூடிய திரைப்பட விருதாக ஆஸ்கர் விருது கருதப்படுகிறது. அந்த விருதைப் பற்றியும் பல விமர்சனங்கள் இருந்தாலும் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருதுக்கு இந்தியப் படங்கள் போகுமா, விருதைப் பெறுமா என்ற எதிர்பார்ப்பு மட்டும் இந்தியத் திரைப்பட ரசிகர்களிடையே இருந்து வருகிறது.
2009ம் ஆண்டு 'ஸ்லம் டாக் மில்லியனர்' படத்திற்காக ஏ.ஆர்.ரகுமான் இரண்டு ஆஸ்கர் விருதுகளைப் பெற்ற பிறகு தமிழ் ரசிகர்களுக்கும் ஆஸ்கர் விருது மீதான ஆர்வம் அதிகரித்தது.
இன்று நடைபெற்ற 89வது ஆஸ்கர் விருதில் சிறந்த வெளிநாட்டுப் படத்திற்கான போட்டியில் இந்தியாவின் சார்பாக வெற்றிமாறன் இயக்கிய 'விசாரணை' படம் தேர்வு செய்து அனுப்பப்பட்டது. ஆனால், முதல் சுற்றிலேயே இப்படம் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது.
89 நாடுகள் வெளிநாட்டுப் படத்திற்கான போட்டிக்குத் தங்களது படங்களை விண்ணப்பித்திருந்தன. அதில் 85 படங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. 9 படங்களைத் தேர்வு செய்து அதிலிருந்து இறுதிப் பட்டியலில் 5 படங்கள் விருதுக்கான போட்டிக்குத் தகுதி பெற்றன.
இறுதிப் பட்டியலில் இடம் பிடித்த Land of Mine (Denmark), A Man Called Ove (Sweden), The Salesman (Iran) (WINNER), Tanna (Australia), Toni Erdmann (Germany), ஆகிய 5 படங்களிலிருந்து ஈரான் நாட்டைச் சேர்ந்த 'தி சேல்ஸ்மேன்' படம் ஆஸ்கர் விருதைத் தட்டிச் சென்றது. இந்தப் படத்தை இயக்கிய அஸ்கர் பர்கதி விருது வழங்கும் விழாவிற்குச் செல்லவில்லை. அமெரிக்க அதிபர் டிரம்ப், ஈரான் உட்பட சில முஸ்லிம் நாட்டைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதற்கு விசா கட்டுப்பாடுகளை விதித்ததால் அவர் ஆஸ்கர் விருது விழாவைப் புறக்கணித்தார்.
ஆஸ்கர் விருதை 'விசாரணை' படம் பெறவில்லை என்றாலும் 72வது வெனிஸ் சர்வதேச திரைப்பட விருதையும், மூன்று தேசிய விருதுகளையும் வென்றுள்ளது.