சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இளவட்ட ஹீரோக்களுடன்தான் நடிப்பேன் என்ற பிடிவாதமாக இருந்து வந்தவர்தான் தமன்னா. அதனால் சில சீனியர் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பு சென்றபோது தடாலடியாக மறுத்து வந்தார். ஆனால் பாகுபலிக்கு பிறகு எகிறும் என்று எதிர்பார்த்த அவரது மார்க்கெட் டல்லடிப்பதால் தற்போது படம் கிடைத் தால் போதும் என்கிற மனநிலைக்கு மாறியிருக்கிறார் தமன்னா. அதன்காரணமாக முன்னணி நடிகைகள் பலரும் நடிக்க தயங்கும் சிம்புவுடன் டிரிபிள் ஏ படத்தில் ஜோடி சேர்ந்து நடித்திருப்பவர், அதையடுத்து தமிழில் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இதே விக்ரம் நடித்த ஒரு படத்திற்கு முன்பு அழைப்பு விடுத்தபோது மறுத்த வர்தான் தமன்னா.
அதேபோல், தெலுங்கில் தனது தந்தை என்டிஆரின் வாழ்க்கை வரலாறு கதையில் பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கமிட்டாகியிருக்கிறார் தமன்னா. இதுபற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, வரலாற்று கதையில் நடிக்க வயது வித்தியாசம் பார்க்கக்கூடாது. நாம் எந்தமாதிரியான வேடத்தில் நடிக்கிறோம் என்பதைத்தான் பார்க்க வேண்டும். அந்த வகையில், இந்த படத்தில் நான் என்டிஆரின் மனைவி ரோலில் நடிக்கிறேன். அது பெருமையில்லையா என்று கூறிய தமன்னா, நரைமுடி நடிகருடன் நடிப்பது குறித்த விமர்சனங்களில் ஆந்திராவில் எழுந்தபோது, அப்படியென்றால் சமீபத்தில் காஜல்அகர்வால்கூடத்தான் சிரஞ்சீவியுடன் நடித்தார். அதேபோல்தான் இதுவும் என்று நறுக்கென்று சொல்லி முடித்துக்கொண்டாராம் தமன்னா.