சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
'அஞ்சான்' படத்தின் மாபெரும் தோல்விக்குப் பிறகு ஒரு இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் எழ முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் லிங்குசாமி. கடும் நெருக்கடியில் இருந்த அவரை விஷால் 'சண்டக்கோழி 2' செய்யலாம் என கை கொடுத்து தூக்க முன்வந்தார். அதற்குள், தெலுங்கு ஹீரோக்களுக்கு லிங்குசாமி கதை சொல்லப் போனதால் லிங்குசாமியுடன் இணையும் திட்டத்தைக் கைவிட்டார். ஆனால், தெலுங்கு ஹீரோக்கள் லிங்குசாமியைக் கைவிட்டதால் மீண்டும் விஷால் பக்கமே வந்தார். சில பல பேச்சுக்களுக்குப் பிறகு 'சண்டக்கோழி 2' படத்திற்கு மீண்டும் உயிர் கொடுத்தனர்.
அதற்குள், தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் தமிழில் நடிக்க வரும் படத்தை லிங்குசாமி இயக்கப் போவதாக அறிவித்தார்கள். ஆனால், அல்லு அர்ஜுன் அடுத்து வேறு ஒரு படத்தில் நடிக்க முடிவு செய்ததால் லிங்குசாமியுடன் தமிழுக்கு வருவாரா என்ற சந்தேகம் இருந்தது. அந்த சந்தேகத்தை தற்போது லிங்குசாமியே தெளிவுபடுத்தியுள்ளார்.
'சண்டக்கோழி 2' படம் விரைவில் ஆரம்பமாக உள்ளது. அந்தப் படம் முடிந்ததும் உடனடியாக அல்லு அர்ஜுன் நடிக்கும் படம் என தெரிவித்துள்ளார். திரும்ப எந்த சர்ச்சையும் வராமல் பார்த்துக் கொள்வாரா ?.