சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 7 நாட்களாக சென்னை மெரினாவில் மாணவர்களும், இளைஞர்களும், பெண்களும், தமிழ் மக்களும் குடும்பம் குடும்பமாகப் போராடி வந்தார்கள். இன்று காலை முதல் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதிகாலை முதல் ஆரம்பமான நடவடிக்கை இன்னும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. சாலை பக்கம் மணலில் அமர்ந்திருந்த போராட்டக்காரர்களில் பலர் விரட்டப்பட்ட நிலையில், மேலும் பலர் கடலை நோக்கி சென்று போராட ஆரம்பித்து வருகிறார்கள். அவர்களுக்கு பக்க பலமாக மீனவர்கள் குடும்பம் குடும்பமாக வந்து கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆரம்பத்தில் இருந்தே குரல் கொடுத்து வரும் கமல்ஹாசன் இன்று தனது டுவிட்டரில் ஒரு பதிவை போட்டிருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது... “யார் ஒருவர் கண்ணியம் தவறினாலும், அது சங்கமித்திருக்கும் அனைவரையும் பாதிக்கும். வாழ்த்துக்கள் விமர்சனமாகாதிருக்க விரசக் கேலிகளை தவிர்க்கவும்”. என்று கமல் கூறியுள்ளார்.