சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
இளைஞர்களின் போராட்டம் பெருமை கொள்ள செய்வதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறியுள்ளார். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தில் கடந்த ஐந்து நாட்களாக போராட்டம் வலுப்பெற்ற நிலையில் திரையுலக பிரபலங்கள் பலரும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்தார். அதன்படி நேற்று வெள்ளிக்கிழமை ஏ.ஆர்.ரஹ்மான் அவரது மகன் அமீன் மற்றும் குடும்பத்தார் உண்ணாவிரதம் இருந்தனர்.
பின்னர் 6 மணியளவில் பெரிஸ்கோப் என்ற இணையதளத்தில் ரசிகர்களுடன் பேசினார் ரஹ்மான். அப்போது அவர் பேசுகையில், என்னுடன் என் மகன் அமீனும் உண்ணாவிரதம் இருந்தார். இளைஞர்களின் அமைதியான போராட்டத்தைப் பார்க்கும் போது பெருமையாக இருக்கிறது. அனைத்தும் நல்லபடியாக முடியும் என்றார்.
இந்த லைவ்சாட்டின் போது ரஹ்மான் இடையிடையே தமிழா... தமிழா... என்ற பாடலை பாடினார்.