சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தியேட்டர்கள் காட்சிகள் நாளை(ஜன.,19ம் தேதி) ரத்து செய்யப்படுவதாக திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஜல்லிக்கட்டு தொடர்பான போராட்டம் தமிழகத்தில் அடுத்த லெவலுக்கு சென்று கொண்டு இருக்கிறது. நடிகர் சங்கம் உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு ஆதரவாக திரையரங்கு உரிமையாளர்களும் களம் இறங்குகின்றனர். இதுதொடர்பாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் மற்றும் கூட்டமைப்பு சார்பில் அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் இருவரும் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அதன்படி நாளை(ஜன., 20ம் தேதி) தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் காலை முதல் மாலை 6 மணிவரை அனைத்துக் காட்சிகளும் ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளனர்.