சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற குரல் தமிழகம் தாண்டி, கடல் கடந்து உலகம் முழுக்க வலுப்பெற்று வருகிறது. திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். நடிகர் ஜெயம் ரவி, தனது பட ஷூட்டிங்கிற்காக வெளியூரில் இருப்பதால் அவர் போரட்டத்தில் பங்கேற்கவில்லை, ஆகையால் ஒரு வீடியோவாக பதவிட்டு ஜல்லிக்கட்டு தனது ஆதரவை தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது...
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராடும் அனைத்து தமிழர்களுக்கும் என் நன்றி வணக்கம். நானும் ஆதரவாய் இருக்கிறேன் என்று சொல்லவே தேவையில்லை ஏனெ்னறால் நானும் தமிழன் தான். தற்போது தலக்கோணம் காட்டு பகுதியில் படப்பிடிப்பில் உள்ளேன், சென்னை வந்தவுடன் நானும் கலந்துகொள்ள ஆவலாக இருக்கிறேன். நிறைய அநியாயங்கள் நடக்கிறது அதையெல்லாம் ஏன் பீட்டா தடை செய்யவில்லை. உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் குதிரை பந்தயத்தில் எவ்வளவு விஷயங்கள் நடக்கிறது, அது எப்படி வதைபடுகிறது, அதைப்பற்றி ஏன் பீட்டா பேசவில்லை. பணம் விளையாடுவதால் தான் இந்த பீட்டா பேசவில்லையா என்று தோன்றுகிறது. இது தமிழர்களின் கலாச்சாரம் சார்ந்த விஷயம் என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது வன்முறையான போராட்டம் கிடையாது, அரசியல் சார்ந்த போராட்டமும் இல்லை, கூடிய விரைவில் ஒரு நல்ல தகவல் கிடைக்கும் என்று நம்புகிறோம், விரைவில் நானும் உங்களுடன் கலந்து கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயம் ரவி கூறியுள்ளார்.