நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் | நான்கு மொழிகளில் ரீமேக்காகும் ஹிட் தொடர் | அந்தமானுக்கு ஹனிமூன் சென்ற சுவாசிகா - பிரேம் ஜாக்கப் | ஒரே வருடத்தில் எண்ட் கார்டு போட்ட ஹிட் சீரியல் : ரசிகர்கள் வருத்தம் | அமரன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பு |
விஜய்சேதுபதி, காயத்ரி நடித்த புரியாத புதிர் படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே தயாராகிவிட்டது. பலவேறு பிரச்சினைகள் காரணமாக ரிலீசாகவில்லை. பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளி வைக்கப்பட்டது. கடைசியாக ஜே.எஸ்.கே பிலிம் கார்பரேஷன் சார்பில் ஜே.கே.சதீஷ்குமார் படத்தை வாங்கி டிசம்பர் 23ந் தேதி வெளிவருவதாக அறிவித்தார், ஆனால் வரவில்லை. அதன்பிறகு பொங்கலுக்கு கட்டாயம் வரும் என்றார் வரவில்லை. இதுகுறித்து படத்தின் தயாரிப்பாளர் ரபேல் ஸ்டூடியோ தீபன் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
எங்கள் அனைவருக்கும் வருத்தமான தருணம் இது. முதன் முறையாக தயாரிப்பு துறையில் அடியெடுத்து வைத்திருக்கும் நான், புரியாத புதிர் பொங்கல் திருவிழா நாளில் வெளியாவதை எண்ணி மிகவும் மகிழ்ச்சியில் இருந்தேன். அதுமட்டுமின்றி படத்துக்கு எல்லா தரப்பிலிருந்தும் கிடைத்த ஆதரவு புதிய உற்சாகத்தை கொடுத்தது.
ஆனால் என்னுடைய தயாரிப்பில் அடுத்ததாக உருவாகி வரும் ஆக்கோ திரைப்படம் சம்பந்தப்பட்ட ஒரு பிரச்சினையால் புரியாத புதிர் வெளியீட்டை தள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி விட்டது. எங்களுக்கு உதவிய அனைவருக்கும் நன்றி எங்களின் வெற்றி தள்ளிபோயிருக்கிறதே தவிர, மறுக்கப்படவில்லை. விரையில் படத்தை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். என்கிறார் தீபன்.