அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா | பார்த்தால் பசிதீரும், பத்ரி, வீரம் - ஞாயிறு திரைப்படங்கள் | சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் |
மதயானைக்கூட்டம் படத்தில் நடிகராக அறிமுகமானவர் எழுத்தாளர் வேலராம மூர்த்தி. பின்னர், கொம்பன், பாயும்புலி, சேதுபதி, கிடாரி படங்களில் வில்லன் மற்றும் அப்பா வேடங்களில் நடித்த அவர், தற்போது என்னை நோக்கி பாயும் தோட்டா, தொண்டன் உள்பட சில படங்களில் முக்கியத்துவம் வாய்ந்த வேடங் களில் நடித்து வருகிறார். குறிப்பாக, இதுவரை கிராமத்து கதைகளிலேயே நடித்து வந்த அவர், கெளதம்மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டாவில் சிட்டி சப்ஜெக்ட்டில் நடிக்கிறார்.
ஆக, இதுவரை கிராமத்துக் கதைகளுக்குத்தான் பொருத்தமாக இருப்பார் என்று கருதப்பட்டு வரும் வேலராமமூர்த்தி, என்னை நோக்கி பாயும் தோட்டா படத்திற்கு பிறகு கிராமம், நகரம் என இரண்டுவிதமான கதைகளுக்கும் ஏற்ற நடிகராகி விடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில், பத்து ஆண்டுகளுக்கு மேலாக தென்னிந்திய சினிமா மற்றும் இந்தி சினிமா வரை புகழின் உச்சியில் இருந்து வந்த பிரகாஷ்ராஜின் வில்லன் மார்க்கெட் தற்போது சரிந்து விட்டதை அடுத்து, பிரகாஷ்ராஜ்க்கான வில்லன் வேடங்கள் வேலராமமூர்த்தியை முற்றுகையிட்டிருக்கிறது. அதனால் பிரகாஷ்ராஜின் வில்லன் இடத்தை வேல ராமமூர்த்தி பிடித்து விடுவார் என்றொரு பேச்சு கோலிவுட்டில் எழுந்திருக்கிறது.