சவால் தான்... ஆனாலும் மகிழ்ச்சியே... - தமன்னா | 'கல்கி 2898 ஏடி' ரிலீஸ் ஜூன் 27-க்கு தள்ளிப்போனது | விஜய் பிறந்தநாளில் வெளியாகும் கோட் இரண்டாவது பாடல் | அல்லு அர்ஜூன் சம்பளம் ரூ.150 கோடியா... | நெல்சன் - விஜய்யின் கனவு படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் தெரியுமா ? | சிவசக்தியாக உருமாறிய தமன்னா | மம்முட்டிக்கு மாற்றாக நடிக்க பாலிவுட்டில் யாரும் இல்லை : வித்யாபாலன் பாராட்டு | சர்ச்சை நடிகருக்கு முன்பாக வேறு நடிகர் : புஷ்பா இயக்குனர் புது தகவல் | கேங்ஸ்டர் ரங்காவுக்கு ஏன் பிளாஷ்பேக் இல்லை ? ; ஆவேசம் இயக்குனர் | கவனம் பெறும் ‛ஸ்டார்' டிரைலர் : வெவ்வேறு லுக்கில் அசத்தும் கவின் |
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கு வருகிற பிப்ரவரி மாதம் 5ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கலும் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேர்தலுக்கு தடைகேட்ட தயாரிப்பாளர் சங்க முன்னாள் நிர்வாகி கே.ராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் தேதியை பொதுக்குழுவை கூட்டி முறையாக அறிவிக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக அறிவித்துள்ளனர். அதோடு தேர்தல் கட்டணத்தை தலைவர் பதவிக்கு ஒரு லட்சம் மற்ற பதவிகளுக்கு 50 ஆயிரம், 10 ஆயிரம் என்று கட்டணம் நிர்ணயித்துள்ளனர். சட்டமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிடக்கூட இவ்வளவு கட்டணம் கிடையாது. தயாரிப்பாளர் சங்கத்தில் 70 சதவிகிதம் பேர் சிறு தயாரிப்பாளர்கள் அவர்களால் இந்த கட்டணத்தை கட்ட முடியாது. அதுவும் கட்டணத்தை பல மடங்கு உயர்த்த தயாரிப்பாளர் சங்க செயற்குழுவிற்கு அதிகாரமில்லை.